offer for you

புதன், 22 ஜனவரி, 2025

பொலிவை இழக்கும் ஜரிகை உற்பத்தி: காஞ்சி ஆலையை மீட்க என்ன வழி?

​காஞ்​சிபுரத்​தில் பட்டு நெசவுத் தொழிலை நம்பி 10 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்கள் உள்ளனர். இவர்​களின் நலன் கருதி கைத்தறி சங்கங்களை தோற்று​வித்​தவர் சுதந்திர போராட்டத் தியாகி கே.எஸ்​.பார்த்​தசா​ரதி. இவர், கூட்டுறவு சங்கங்கள் மூலம் உருவாக்​கப்​படும் பட்டுச் சேலைகளுக்கான ஜரிகையை சூரத் பகுதி​யில் இருந்தே வாங்க வேண்டி இருப்​ப​தால் அந்த ஜரிகையை தயாரிக்​கும் தொழிற்​சாலையை தமிழக அரசே நிறுவ வேண்​டும் என்று அப்போது முதல்​வராக இருந்த அண்ணா​விடம் கோரிக்கை வைத்​தார். அண்ணா அதற்கான நடவடிக்கைகளை எடுத்​தார்.

ஆனாலும் எம்ஜிஆர் ஆட்சிகாலத்​தில் 1971-ம் ஆண்டு​தான் இந்த ஜரிகை உற்பத்தி தொழிற்​சாலை காஞ்​சிபுரம் ஓரிக்கை​யில் தொடங்​கப்​பட்​டது. தமிழக அரசால் தொடங்​கப்​பட்டு தற்போதுவரை நடத்​தப்​படும் ஒரே ஜரிகை உற்பத்தி நிறு​வனம் இது என்பது குறிப்​பிடத்​தக்​கது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wqKOrEz
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now