
காஞ்சிபுரத்தில் பட்டு நெசவுத் தொழிலை நம்பி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களின் நலன் கருதி கைத்தறி சங்கங்களை தோற்றுவித்தவர் சுதந்திர போராட்டத் தியாகி கே.எஸ்.பார்த்தசாரதி. இவர், கூட்டுறவு சங்கங்கள் மூலம் உருவாக்கப்படும் பட்டுச் சேலைகளுக்கான ஜரிகையை சூரத் பகுதியில் இருந்தே வாங்க வேண்டி இருப்பதால் அந்த ஜரிகையை தயாரிக்கும் தொழிற்சாலையை தமிழக அரசே நிறுவ வேண்டும் என்று அப்போது முதல்வராக இருந்த அண்ணாவிடம் கோரிக்கை வைத்தார். அண்ணா அதற்கான நடவடிக்கைகளை எடுத்தார்.
ஆனாலும் எம்ஜிஆர் ஆட்சிகாலத்தில் 1971-ம் ஆண்டுதான் இந்த ஜரிகை உற்பத்தி தொழிற்சாலை காஞ்சிபுரம் ஓரிக்கையில் தொடங்கப்பட்டது. தமிழக அரசால் தொடங்கப்பட்டு தற்போதுவரை நடத்தப்படும் ஒரே ஜரிகை உற்பத்தி நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wqKOrEz
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக