
சென்னை: கோயம்பேடு சந்தையில் தேங்காய் விலை உயர்ந்துள்ளது. சில்லறை விலையும் அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த மாதம் ஒரு கிலோ தேங்காய் ரூ.40 முதல் ரூ.55 வரை விற்பனையானது. நேற்று ரூ.65 வரை விற்றது. சில்லறை விலையில் ஒரு கிலோ தேங்காய் அதிகபட்சமாக ரூ.90 வரை விற்பனையானது.
இதுகுறித்து தேங்காய் வியாபாரிகள் கூறும்போது, ‘‘கனமழை மற்றும் நோய் காரணமாக உற்பத்தி பாதித்து தேங்காய் வரத்து சுமார் 300 டன் வரை குறைந்துள்ளது. இதுதான் தேங்காய் விலை உயர்வுக்கு காரணம்’’ என்று தெரிவித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XfVxp8R
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக