
மதுரை: தமிழக அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் பயிர்க்கடன், கறவை மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வளர்ப்புக்கான கடன், தங்க நகைக் கடனை பெற்று பயனடைந்து வருகின்றனர். மேலும் உரங்கள் மற்றும் விவசாயத்துக்கு தேவையான கருவிகளையும் பெற்று வருகி்ன்றனர்.
தற்போது கூட்டுறவு வங்கிகளுக்கு நிதி ஒதுக்கீடு குறைந்துள்ளதால், குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகளுக்கு மட்டுமே பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் பலர் பயிர்க்கடன் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து விவசாயிகள் அனைவருக்கும் பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TeoPHMm
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக