offer for you

திங்கள், 24 பிப்ரவரி, 2025

‘பாரத் டெக்ஸ்’ சர்வதேச ஜவுளி கண்காட்சியை தமிழகத்தில் நடத்த தொழில்துறையினர் கோரிக்கை

கோவை: இந்திய ஜவுளித்தொழில் வளர்ச்சிக்கு உதவும் நோக்கத்தில் மத்திய அரசு ஆண்டுதோறும் டெல்லியில் நடத்தி வரும் ‘பாரத் டெக்ஸ்’ கண்காட்சியை தமிழகம் அல்லது மகாராஷ்டிராவில் நடத்த வேண்டும். அப்போதுதான் சங்கிலி தொடரிலுள்ள அனைவரும் பயன்பெற வாய்ப்பு ஏற்படும் என தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஜவுளித்தொழில்துறையினருக்கு உதவும் நோக்கத்தில், மத்திய அரசு மற்றும் ஜவுளித்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் ‘பாரத் டெக்ஸ்’ என்ற கண்காட்சி டெல்லியில் நடத்தப்படுகிறது. இத்தொழிலில் முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரியம் கொண்ட மாநிலங்களில் நடத்தினால் மட்டுமே மத்திய அரசின் முயற்சிக்கு சிறந்த பயன் கிடைக்கும் என தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qM3xJN8
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now