
சென்னை: தமிழகத்தில் காலாவதி சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலுவிடம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலுவை தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: "தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிக்கும் நடைமுறை மற்றும் ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்துவது, பொதுமக்கள், வாகனங்கள் வைத்திருப்போர், வணிகர்கள்கள், சுங்கச் சாவடிகளுக்கு அருகில் உள்ள ஊர் பொதுமக்களை பாதிக்கிறது. தற்போது சுங்கச் சாவடிகளில் பாஸ் பெற ரூ.3 ஆயிரம் நிர்ணயித்து இருப்பதாக தகவல் வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cPa423U
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக