offer for you

ஞாயிறு, 16 மார்ச், 2025

சென்னையில் மார்ச் 30-ல் பெண் தொழில் முனைவோருக்கான தேசிய மகளிர் உச்சி மாநாடு!

சென்னை: 'இந்து தமிழ் திசை'-ட்ரீமி ஈவென்ட்ஸ் இணைந்து நடத்தும் தேசிய மகளிர் உச்சி மாநாடு 2025 மார்ச் 30ம் தேதி நடைபெறவுள்ளது. தடைகளைத் தாண்டி முன்னேற விரும்பும் பெண் தொழில் முனைவோர், தங்களின் தொழில் முயற்சிகளில் சிறந்து விளங்கத் தேவையான உத்திகள், நுண்ணறிவு மற்றும் தொடர்புகளை வழங்கும் நோக்கத்துடன் இந்த உச்சி மாநாடு நடத்தப்படுகிறது.

இந்த உச்சி மாநாடு வெறும் கற்றல் பற்றியது மட்டுமல்ல; செயல் பற்றியது. மதிப்பு மிக்க நுண்ணறிவுகளைப் பெறவும். நடைமுறை உத்திகளை அறியவும், வணிக இலக்குகளை அடைவதற்கு வழி நடத்தி ஊக்கமளிக்கும் தலைவர்களுடன் இணையவும் இது பயன்படும். தொழில் தொடங்கவும், வணிகத்தை விரி வாக்கம் செய்யவும் இந்த நிகழ்வில் தேவையான ஆலோசனைகளைப் பெற முடியும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1xqWZsX
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now