
சென்னை: தமிழ்நாடு வணிக வரித் துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், 318 போலிப் பட்டியல் வணிகர்கள் ரூ.951.27 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், போலி முத்திரைத்தாள் விற்பனை வணிகர்கள் இருவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மாதாந்திர இணை ஆணையர்கள் அளவிளான ஆய்வுக் கூட்டங்களில் நியாயமாக வணிகம் செய்யும் வணிகர்களின் நலனை கருத்தில்கொண்டு, போலிப் பட்டியல் வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள தொடர்ந்து அறிவுறுத்தியதின்பேரில், 14.03.2024 மற்றும் 02.07.2024 ஆகிய தேதிகளில் வணிக வரி ஆணையரின் உத்தரவின்படி முதல் மற்றும் இரண்டாவது மாநில அளவிலான தீடீர் செயலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/b9yvLS0
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக