
சென்னை: ‘‘மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, மத்திய மற்றும் மாநில அரசின் நிதியுதவியுடன் 5 மீன்பிடித் துறைமுகம், 32 மீன்பிடி இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டு வரப்படுகிறது. விரைவில் இவை பயன்பாட்டுக்கு வரும்’’ என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, மீன்வளத் துறை அதிகாரிகள் கூறியது: மத்திய அரசின் மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி போன்றவற்றுடன் கடந்த 2018-19ம் ஆண்டு தமிழக மீன்வளத் துறை சார்பில், சென்னை திருவொற்றியூர், நாகப்பட்டினம் மாவட்டம் ஆறுகாட்டுத் துறை, வெள்ளப்பள்ளம், அக்கரைப்பேட்டை, விழுப்புரம் மாவட்டம் அழகங்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் ஆலம்பரை குப்பம், கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் ஆகிய பகுதிகளில் ரூ.757 கோடி மதிப்பில் மீன்பிடி துறைமுகங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wzY01Z8
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக