
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.612 கோடிக்கு புதுச்சேரி நகரில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றில், ரூ.99 கோடி 63 லட்சத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
ஒரே இடத்தில் இருந்து பொதுமக்களுக்கு தேவையான பன்முக சேவைகளை வழங்கிடும் வகையில் இத்திட்டம் வரையறுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் போக்குவரத்து சீரமைப்பு, போக்குவரத்து விதிமீறலை கண்காணித்தல், நகரப்பகுதியில் காற்றின் தரத்தை அறிதல், வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை, சுற்றுலா பயணிகளுக்கான பிரத்யேக செயலி, குடிமக்களுக்கான பிரத்யேக செயலி, நகரம் முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MQj6r0p
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக