
சென்னையில் இன்று (ஏப்.29) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.8,980 ஆகவும், பவனுக்கு ரூ.320 உயர்ந்து 71,840 ஆகவும் விற்பனையாகி வருகிறது. நாளை அட்சய திருதியை வரும் நிலையில், இந்த விலை உயர்வு நகை வாங்குபவர்களுக்கு சற்று கவலையை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு தங்கம் விலை ஏறுமுகத்தில் இருந்தது. குறிப்பாக, பிற நாடுகளுடன் வரி போர் அறிவித்ததையடுத்து, சர்வதேச அளவில் தங்கம் விலை தினசரி ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xRILAYE
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக