
புதுடெல்லி: உணவு விநியோகம், ஐஸ்க்ரீம் தயாரிப்பு போன்றவைகளில் இருந்து செமிகன்டெக்டர், ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு போன்ற உயர் தொழில்நுட்பத் துறைகள் பக்கமும் கவனம் செலுத்துமாறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனை வழங்கினார். மேலும் ஸ்டார்ட் அப் துறையில் அதிக இந்திய முதலீட்டாளர்களின் தேவையையும் அமைச்சர் வலியுறுத்தினார்.
வியாழக்கிழமை நடைபெற்ற ஸ்டார்ட் அப் மகா கும்ப மேளாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், “இந்திய ஸ்டார்ட் அப் துறையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? நாம் உணவு விநியோக செயலிகளில் மட்டும் கவனம் செலுத்தி வேலையில்லாத இளைஞர்களை குறைந்த கூலிகளாக மாற்றியுள்ளோம். இதனால், பணக்கார்களுக்கு வீட்டை விட்டு வெளியே வராமலேயே உணவு கிடைக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fjmolIW
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக