offer for you

புதன், 16 ஏப்ரல், 2025

தமிழகம் முழுவதும் குவாரி, கிரஷர்களில் காலவரையற்ற வேலைநிறுத்தம் - கட்டுமானப் பணிகள் பாதிக்கும் அபாயம்

சேலம்: சிறு கனிம நில வரி விதிப்பை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் கட்டுமானப் பணிகள் பாதிப்பதுடன், அரசுக்கு நாளொன்றுக்கு பல கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று தொடங்கியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் மட்டும் குவாரி மற்றும் கிரஷர்கள் 150-க்கும் மேற்பட்டவை மூடப்பட்டு, சுமார் 1 லட்சம் டன் கனிம உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FAloERN
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now