
சென்னை: சென்னையில் இன்று (மே.6) ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.2,000 என உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.250 என அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களாக குறைந்தும், மாற்றமின்றியும் இருந்த தங்கம் விலை இப்போது மீண்டும் உச்சம் அடைந்துள்ளது.
சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஏப்.22-ம் தேதி ரூ.74,320 என ஒரு பவுன் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உச்சத்தை எட்டியது. பின்னர் படிப்படியாக விலை குறைந்தது. இந்நிலையில், நேற்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்தது. தொடர்ந்து இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 உயர்ந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/m1qfoF9
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக