
திருச்சி: கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க சிபில் ஸ்கோர் நடைமுறையை அமல்படுத்தக் கூடாது என திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அப்போது, சிபில் ஸ்கோர் குறித்து மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரி விளக்கம் அளித்தார்.
திருச்சி ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில், பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் இணைந்து, கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க சிபில் ஸ்கோர் கேட்கும் நடைமுறையை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தினர். மேலும், வங்கிகளில் கடன் நிலுவை இல்லை என்ற சான்று வழங்கவும் கட்டாயப்படுத்தப்படுவதாக புகார் தெரிவித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rVXFxHf
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக