
பொங்கல் பண்டிகையின்போது, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி, சேலை திட்டத்தில் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளதால், 1 லட்சம் தொழிலாளர்களுக்கு 2 மாத வேலையிழப்பு ஏற்படும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது அரசு சார்பில். வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. வரும் 2026 ஜனவரி பொங்கல் பண்டிகையின் போது பொதுமக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்குவதற்காக வேட்டி, சேலை உற்பத்திக்கான அரசாணை கடந்த ஏப்ரலில் வெளியானது. மேலும், வேட்டி உற்பத்திக்கான நூல் விசைத் தறியாளர்களுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து உற்பத்தி பணியை விசைத்தறியாளர்கள் தொடங்கியுள்ளனர். சேலைக்கான நூல் ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gkiSu2h
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக