
கோவை: ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கிய வகையில் இந்தியாவுக்கு 2022 மே மாதம் முதல் 2025 மே மாதம் வரை 17.2 மில்லியன் டாலர், அதாவது ரூ.1,49,989 கோடி சேமிப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கவில்லை என்றால், இந்தக் காலக்கட்டத்தில் மட்டும் மொத்த இழப்பு ரூ.15,29,000 கோடியாக இருந்திருக்கும். ஆண்டுக்கு ரூ.96,923 கோடி இழப்பு ஏற்படும். மத்திய அரசின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ஜெயபால் கூறியது: “நாடு சுதந்திரம் பெற்றது முதல் தற்போது வரை 78 ஆண்டு காலமாக நம்பிக்கைக்குரிய நட்பு நாடு ரஷ்யா. அன்று முதல் இன்று வரை வர்த்தக உறவு மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு உரிய உதவிகளால் இந்த உறவு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1RuvA6l
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக