offer for you

திங்கள், 18 ஆகஸ்ட், 2025

ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்த பிரதமரின் அறிவிப்புக்கு தொழில் துறையினர் வரவேற்பு

தீபாவளி தினத்தன்று ஜிஎஸ்டி வரி விதிப்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் பயன்பெறும் வகையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்து அறிவிப்பு வெளியிடப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என கோவையை சேர்ந்த தொழில் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: இந்திய தொழில் வர்த்தக சபை, கோவை தலைவர் ராஜஷ் லுந்த்: சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பில் வரி குறைப்பு, தானியங்கி முறையில் ஜிஎஸ்டி பதிவு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் வணிகத்தை எளிமையாக்கவும், பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். பிரதமரின் அறிவிப்புக்கு மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ihvgdAK
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now