
புதுடெல்லி: கடந்த 39 மாதங்களாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை இந்தியா, இறக்குமதி செய்துள்ளதால் சுமார் 12.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை சேமித்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் தொடங்கியதைத் தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை இந்தியா குறைந்த விலையில் வாங்கி பயன்படுத்தி வருகிறது.
அதேநேரத்தில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கக் கூடாது, ஏனெனில் அது அதிபர் விளாடிமிர் புதின் அரசுக்கு பொருளாதார ரீதியில் உதவுகிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், இந்தியா தனது சொந்த எரிசக்தி பாதுகாப்பையும், மக்களின் நலனையும் கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்ததாக வாதிட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YxqlnrW
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக