offer for you

திங்கள், 15 செப்டம்பர், 2025

வருமான வரி கணக்கு 6 கோடி பேர் தாக்கல்

புதுடெல்லி: வரு​மான வரி கணக்கு தாக்​கல் செய்​வதற்​கான காலக்​கெடு இன்​றுடன் முடிவடைய உள்ள நிலை​யில் 2025-26-ம் நிதியாண்​டுக்கு வரு​மான வரி கணக்​கு​களை தாக்​கல் செய்​யும் பணி​களில் வரி செலுத்​து​வோர் மும்​முர​மாக ஈடு​பட்​டுள்​ளனர். இந்த நிலை​யில், இது​வரை 6 கோடிக்​கும் அதி​க​மான வரு​மான வரி கணக்​கு​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளாதக வரு​மான வரி துறை அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

மேலும், அவகாசம் வழங்​கப்​படுமா என்ற எதிர்​பார்ப்பு எழுந்​துள்ள நிலை​யில் செப்​. 15 காலக்​கெடு இன்​றுடன் நிறைவடைகிறது. வரு​மான வரி துறை தங்​களது அதி​காரப்​பூர்வ எக்ஸ் கணக்​கில் நேற்று முன்​தினம் தெரி​வித்​துள்​ள​தாவது: தற்​போது வரை 6 கோடிக்​கும் அதி​க​மான வரு​மான வரி கணக்​கு​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளன. கடைசி நேர நெருக்​கடிகளை தவிர்க்க முன்​கூட்​டியே வரி தாக்​கல் செய்​வதன் முக்​கி​யத்​து​வத்தை விளக்​கும் வீடியோக்​களை வரு​மான வரி துறை தொடர்ந்து வெளி​யிட்டு வரு​கிறது. கடந்த சில ஆண்​டு​களாகவே வரு​மான வரி கணக்கு தாக்​கல் செய்​வது அதி​கரித்து வரு​கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rO6vdcf
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now