offer for you

புதன், 3 செப்டம்பர், 2025

தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு பவுன் ரூ.78,000-ஐ கடந்தது

சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.3) புதிய உச்சம் தொட்டுள்ளது. அதன்படி ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.78,000-ஐ கடந்து நகை வாங்குவோருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு உள்​ளிட்​டவை காரண​மாக தங்​கம் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. இந்​நிலை​யில், சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு சரிந்து வரு​வ​தால், பங்குச் சந்​தை​யில் முதலீடு செய்​துள்​ளவர்​கள் தங்​கத்​தில் முதலீடு செய்து வரு​கின்​றனர். இதனால், பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்து வரு​வதுடன், தங்​கத்​தில் முதலீடும் அதிகரித்து வரு​கிறது. இதன் காரண​மாக, தங்​கத்​தின் விலை​யும் அதி​கரித்துக் கொண்டே வரு​கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VezYuXF
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now