
சென்னை: மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) குறைத்துள்ளது. புதிய குறைக்கப்பட்ட வரி நேற்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனையகக் கிளை மேலாளர் ஆர்.கணேஷ்: ஜிஎஸ்டி குறைப்பை அடுத்து டிவி, ஏசி உள்ளிட்ட வீட்டுக்குத் தேவையான பொருட்களின் விலை எவ்வளவு குறைந்துள்ளது என பலர் நேரடியாகவும், போன் மூலமாகவும் விசாரிக்கின்றனர். பலர் முன்பதிவு செய்துவிட்டுச் சென்றுள்ளனர். சிலர் வாங்கவும் செய்துள்ளனர். விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/z1rcPGW
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக