
மும்பை: அதானி மீதான முறைகேடு குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) நிராகரித்ததை தொடர்ந்து நேற்றைய வர்த்தகத்தில் அதானி குழுமப் பங்குகளின் விலை ஒரு சதவீதம் முதல் 13 சதவீதம் வரை ஏற்றம் கண்டது.
அதானி குழுமம் பங்குகளின் விலையை செயற்கையான முறையில் அதிகரித்ததாகவும், கணக்கு வழக்குகளில் மோசடி செய்ததாகவும் ஹிண்டன்பர்க் நிறுவனம் 2023 ஜனவரியில் குற்றம் சாட்டியது. இதையடுத்து, அதானி குழுமப் பங்குகளின் விலை 50 சதவீதம் வரை வீழ்ச்சியை சந்தித்தது. எனினும், இந்த குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் தொடர்ந்து மறுத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RH8NCjA
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக