
புதுடெல்லி: இந்தியாவின் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதியை பிரான்சில் அறிமுகப்படுத்தியதற்குப் பிறகு அங்கு இந்திய சுற்றுலா பயணிகளின் வருகை 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக பிரெஞ்சு நிறுவனமான லைரா நெட்வொர்க்கின் தலைவர் கிறிஸ்டோப் மரியெட் தெரிவித்துள்ளார்.
குளோபல் பின்டெக் மாநாட்டில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து கூறியுள்ளதாவது:ஒரு வருடத்திற்கு முன்பாக இந்தியாவின் யுபிஐ வசதியை பிரான்சின் ஈபிள் கோபுரத்தில் அறிமுகப்படுத்தினோம். சில வாரங்களுக்கு முன்னதாக ஈபிள் கோபுரத்தின் பொது மேலாளருடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக அவர் கூறியது வியப்பை ஏற்படுத்தியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/l4BWADr
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக