
மும்பை: இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மரும் பிரதமர் நரேந்திர மோடியும் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது இங்கிலாந்திலிருந்து ரூ.4,155 கோடியில் மார்லெட் ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் மும்பை வந்தார். அவருடன் 125 பேர் அடங்கிய குழுவும் இந்தியா வந்துள்ளது. இந்நிலையில், மும்பையில் உள்ள மகாராஷ்டிர ஆளுநர் மாளிகையில் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மரும் பிரதமர் நரேந்திர மோடியும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ரூ.4,155 கோடியில் இங்கிலாந்து ஏவுகணைகளை வாங்குவது உட்பட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/s6MDqBW
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக