offer for you

செவ்வாய், 14 அக்டோபர், 2025

ஆந்திராவில் ரூ.87,570 கோடி முதலீட்டில் கூகுள் டேட்டா சென்டர் அமைகிறது: டெல்லியில் இன்று ஒப்பந்தம் கையெழுத்து

வி​சாகப்​பட்​டினம்: ஆந்​திர மாநிலம், விசாகப்​பட்​டினத்​தில் பிரபல கூகுள் நிறு​வனம் ரூ.87,570 கோடி செல​வில் டேட்டா சென்​டரை அமைக்க உள்​ளது. இதற்​காக டெல்​லி​யில் இன்று ஆந்​திர அரசு மற்​றும் மத்​திய அரசுடன் ஒப்​பந்​தம் கையெழுத்​தாகிறது.

விசாகப்​பட்​டினத்​தில் கூகுள் நிறு​வனம் 1 ஜிகா வாட் திறன் கொண்ட மிகப்​பெரிய டேட்டா சென்​டரை அமைக்க உள்​ளது. ரூ.10 லட்​சம் பில்​லியன் அமெரிக்க டாலர்​கள் (இந்​திய மதிப்​பில் ரூ.87,570 கோடி) மதிப்​பீட்​டில் இந்த டேட்டா சென்​டர் அமைய உள்​ளது. ஆதலால் இது நாட்​டின் மிகப்​பெரிய நேரடி வெளி​நாட்டு முதலீ​டாக கருதப்​படு​கிறது. இதற்​காக நேற்று மாலை ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு, ஐடி துறை அமைச்​சர் நாரா லோகேஷ் மற்​றும் ஆந்​திர அரசின் உயர் அதி​காரி​கள் ஆகியோர் டெல்​லிக்கு சென்​றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/v5IK0x6
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now