offer for you

செவ்வாய், 21 அக்டோபர், 2025

ஊழியர் தற்கொலை: ஓலா எலக்ட்ரிக் நிறுவனர் பவிஷ் அகர்வால் மீது வழக்குப் பதிவு

பெங்களூரு: ஊழியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனர் பவிஷ் அகர்வால் மற்றும் அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது கர்நாடக மாநிலத்தில் உள்ள சுப்ரமண்யபுரா காவல் நிலையம்.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் பொறியாளராக கடந்த 2022 முதல் பணியாற்றி வந்தவர் கே.அரவிந்த். கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி அன்று, தனது அடுக்குமாடி குடியிருப்பில் விஷம் அருந்தி அவர் தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட அவரது உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக கடந்த 6-ம் தேதி அவரது சகோதரர் அஸ்வின் கண்ணன், காவல் துறையில் புகார் அளித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6QfAlPJ
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now