உலகின் முன்னணி பங்குச்சந்தை முதலீட்டாளரான வாரன் பபெட் சொன்னது போல ஒரே கூடையில் அனைத்து முட்டைகளையும் வைக்காதே என்ற கூற்றுப்படி, ஒருவர் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய தொடங்கும் பொழுது ஒரே ஒரு குறிப்பிட்ட நிறுவன பங்கினையோ அல்லது குறிப்பிட்ட துறை சார்ந்த பங்கினையோ தேர்ந்தெடுத்து முதலீடு செய்யும்பொழுது அந்த குறிப்பிட்ட நிறுவனம் அல்லது துறை சார்ந்த பங்குகள் சிறப்பாக செயல்படாமல் போவதற்கு வாய்ப்புள்ளது. ஆகையால், பங்கு போர்ட்போலியோ (Stock Portfolio) முறையில், பல்வேறு துறை சார்ந்த பங்குகளை தேர்ந்தெடுத்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தில் ஒவ்வொரு பங்கிலும் முதலீடு செய்வது சிறந்ததாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக