
புதுடெல்லி: உலகின் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. வரும் 2030-க்குள் இந்தியா 3-வது இடத்துக்கு முன்னேறும் என்று அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச முதலீட்டு வங்கி மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.
‘ஏன் இது இந்தியாவின் சகாப்தம்’ என்ற தலைப்பில் மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் உற்பத்தித் துறை மற்றும் எரிசக்தித் துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடும் மேம்பட்ட டிஜிட்டல் கட்டமைப்பும் இந்தியாவை 2030-ம் ஆண்டுக்குள் பொருளாதார ரீதியாக 3-வது பெரிய நாடாக நிலைபெறச் செய்யும் என்று கூறியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4q0aBQL
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக