
கோவை: பஞ்சு அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்படாது, இறக்குமதி வரியும் ரத்து செய்ய முடியாது என்ற மத்திய அமைச்சரின் அறிவிப்பு தொழில்துறையினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 1.10 கோடி பேர் வேலைவாய்ப்பு பெறும் இந்திய ஜவுளித் தொழிலில், சமீபகாலமாக பஞ்சு விலையில் நிலையற்றதன்மை காணப்படுகிறது. இதனால், ஒட்டுமொத்த ஜவுளி சங்கிலித்தொடரிலுள்ள அனைத்து தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இறக்குமதி வரி 11 சதவீதத்தை ரத்து செய்ய வேண்டும் என நாடு முழுவதும் உள்ள தொழில் அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இறக்குமதி வரியை ரத்து செய்ய முடியாது என அறிவித்துள்ளார். இதனால், தொழில்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/f2urkGF
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக