
மதுரை: மதுரை ராஜா முத்தையா மன்றத் தில் சிப்போ மற்றும் நபார்டு வங்கி சார்பில் ‘மதுரை உத்சவ்-கிராப்ட்’ கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் நேற்று தொடங்கி வைத்தார்.
சிப்போ தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜகோபால், நபார்டு வங்கி மதுரை மாவட்ட வளர்ச்சி மேலாளர் சக்தி பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்காட்சியில் சிப்போ பொதுமேலாளர் மு.பழனிவேல் முருகன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) காளிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். நேற்று தொடங்கிய இக்கண்காட்சி டிச. 29வரை 5 நாட்கள் நடைபெறும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BafLM5n
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக