
மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மல்லிகைப் பூவின் விலை உயர்ந்து வருகிறது. வியாழக்கிழமை மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பூ மார்க்கெட்டில் கிலோ ரூ.2500-க்கு விற்பனையானது.
கடந்த காலத்தில் பண்டிகை நாட்களில் மட்டும் மதுரை மல்லிகைப் பூவுக்கு பற்றாக்குறை ஏற்படும். கடந்த ஒராண்டாக மதுரை மல்லிகைப் பூக்களுக்கு பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியிருக்கிறது. பெரிய சந்தைகளில் மட்டுமே மல்லிகைப் பூக்கள் கிடைக்கிறது. சில்லறை பூ வியாபாரிகள், மல்லிகை பூ விற்பதில்லை. அந்தளவுக்கு அதன் விலை சாதாரண நாட்களிலும் உச்சத்தில் இருப்பதோடு போதுமான பூக்களும் சந்தைக்கு வருவதில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BfiT37s
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக