offer for you

ஞாயிறு, 22 ஜனவரி, 2023

தொடர்ந்து மோசமான செயல்பாடு: 450 புதிய ஊழியர்களை பணிநீக்கம் செய்தது விப்ரோ 

புதுடெல்லி: பயிற்சிகளுக்கு பின்னரும் உள்மதிப்பீடு சோதனையில் தொடர்ந்து மோசமாக செயல்பட்ட 400 தொடக்கநிலை ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதாக தகவல்தொழிநுட்ப சேவை நிறுவனமான விப்ரோ தெரிவித்துள்ளது. இதன்மூலம், சமீப வாரங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கூகுள், அமேசான், இந்திய நிறுவனமான ஸ்வீகி நிறுவனங்களின் வரிசையில் விப்ரோவும் இணைந்துள்ளது.

இதுகுறித்து விப்ரோ அளித்துள்ள அறிக்கையில், "மதிப்பீட்டு செய்முறை என்பது நிறுவனத்தின் வணிக நோக்கங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவை போன்றவைகளுடன் ஊழியர்களை சீரமைப்பதற்கான மறுமதிப்பீடுகளை உள்ளடக்கியது. இந்த விரிவான மற்றும் முறையான செயல்மதிப்பீட்டு முறையின் தொடர்ச்சியான செயல்பாடு ஊழியர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் மறுபயிற்சியளிக்கவும், சில நேரங்களில் சில ஊழியர்களை நிறுவனத்தில் இருந்து நீக்கவும் வழிவகுத்துவிடுகிறது. பயிற்சிகளுக்கு பின்னரும், மதிப்பீடு செயல்பாடுகளில் தொடர்ந்து மோசமாக செயல்பட்ட 452 புதிய ஊழியர்களை நாங்கள் பணியிலிருந்து நீக்கியுள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1FU3ysp
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now