
சென்னை: இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்கான குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணத்தை ரூ.155 என உயர்த்தியுள்ளது. இது தமிழகம் உட்பட பல்வேறு மாநில சர்க்கிளில் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ப்ரீபெய்ட் சிம் கார்டுகளை பயன்படுத்தும் பயனர்கள் மாதாந்திர குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்தால் மட்டுமே இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள முடியும் நிலை உள்ளது. அதற்கான கட்டணம் டெலிகாம் நிறுவனத்தை பொறுத்து மாறுபடும். இந்தச் சூழலில் ஏர்டெல் அந்த குறைந்தபட்ச கட்டணத்தின் விலையை உயர்த்தி உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/P8CfyRQ
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக