offer for you

செவ்வாய், 3 ஜனவரி, 2023

பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தக ஒப்பந்தத்தால் தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு

சென்னை: ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மேற்கொண்டுள்ள பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தால், தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம், இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த டிசம்பர் 29-ம் தேதி இது அமலுக்கு வந்துள்ளது. அண்மைக்காலத்தில் வளர்ந்த நாட்டுடன் இந்தியா மேற்கொண்டுள்ள முதல் வர்த்தக ஒப்பந்தம் இதுவாகும்.

இதன்மூலம் இரு நாடுகள் இடையே 90 சதவீதம் அளவுக்கு வர்த்தகம் நடைபெறும். இதுகுறித்து இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய (ஃபியோ) தென்மண்டல இணை இயக்குநர் ஜெனரல் கே.உன்னிகிருஷ்ணன் கூறியதாவது: இந்தியாவுடன் அதிக வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளில் 17-வது நாடாக ஆஸ்திரேலியா உள்ளது. அதேபோல, ஆஸ்திரேலியாவுடன் அதிக அளவில் வர்த்தகம் செய்யும் நாடுகளில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது. கடந்த 2021-ல் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 27.5 பில்லியன் டாலருக்கு இருதரப்பு வர்த்தகம் நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8s4yGz6
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now