
மும்பை: வெகு விரைவில் டாடா குழுமம் இந்தியாவில் ஐபோன் தயாரிப்பை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் உள்ள விஸ்ட்ரான் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்திக் கூடத்தை வாங்கும் நோக்கில் அதற்கான பேச்சுவார்த்தையை டாடா மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. அது நடந்தால் இந்தியாவில் ஐபோன் தயாரிப்பு பணியில் ஈடுபடும் முதல் இந்திய நிறுவனம் ஆகும் டாடா.
அதோடு இதன் மூலம் இந்தியாவை மின்னணு உற்பத்தி மையமாக மாற்ற முயற்சிக்கும் இந்திய அரசின் நோக்கத்திற்கு பெரிய ஊக்கமாகவும் அமையும். இது தொடர்பாக தைவான் நாட்டின் விஸ்ட்ரான் நிறுவனம் மற்றும் டாடா குழுமம் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/V50c2S7
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக