offer for you

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

உத்தர பிரதேசத்தில் ரூ.75 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறார் முகேஷ் அம்பானி

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி உத்தர பிரதேசத்தில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.75,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “உத்தர பிரதேசத்தில் சில்லறை வணிகம், புதுப்பிக்கத்தக்க எரிஆற்றல் உள்ளிட்ட துறையில் ரிலையன்ஸ் பெரும் முதலீடு மேற்கொள்ள உள்ளது. ரிலையன்ஸ் ரீடெயில், உத்தர பிரதேசத்தில் உள்ள சிறிய கடைகளை மேம்படுத்தி அவர்களது வருவாயை பெருக்கும். வேளாண் பொருட்களின் சந்தையையும் ரிலையன்ஸ் ரீடெயில் விரிவுபடுத்தும். புதுப்பிக்கத்தக்க எரிஆற்றல் கட்டமைப்பை ரிலையன்ஸ் உருவாக்கும்” என்று தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/legkfCS
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now