
மத்திய அரசின் பட்ஜெட் மக்களுக்கு பயன் தராது என்று கூறியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “நடுத்தர மக்களுக்கான வருமான வரி சலுகை அறிவிப்பு, சேமிப்பைக் குறைத்து மக்களை செலவு செய்ய தூண்டும் வகையில் உள்ளது” என்று கூறியுள்ளார்.
மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் 2023-2024 மத்திய பட்ஜெட் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. சங்கத் தலைவர் ஜெகதீசன் வரவேற்றார். முதுநிலை தலைவர் ரத்தினவேல் உள்ளிட்டோர் பேசினர். நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியது: “நாட்டின் வளர்ச்சிக்கு 4 உந்து சக்திகள் தேவை. முதலாவது மக்களின் நுகர்வு. 2-வது அரசு முதலீடு, 3-வது தனியார் முதலீடு, 4-வது ஏற்றுமதி. இந்த 4 உந்து சக்திகளும் கடந்த காலங்களில் முழு திறனோடு செயல்பட்டது. தற்போது அரசு முதலீடு என்ற உந்து சக்தி மட்டுமே செயல்படுகிறது. நுகர்வு சக்தி குறைந்துவிட்டது. அதேபோல், தனியார் முதலீடு, ஏற்றுமதி குறைந்துவிட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/F6IkZvA
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக