
மதுரை: தக்காளி விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் மதுரையில் 15 கிலோ முதல் தர தக்காளியே ரூ.80-க்குதான் விற்பனையானது. கர்நாடகா, ஆந்திராவைபோல் மதுரையில் தென் மாவட்ட தக்காளி விவசாயிகளை காப்பாற்ற மதிப்புக் கூட்டு தொழிற்சாலைகள் அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அன்றாட சமையலில் தக்காளி தவிர்க்க முடியாதது. ஆனால், தக்காளி விலை நிலையற்றது. மற்ற காய்களை போல் தக்காளி விலையை கனிக்க முடியாது. இலேசான மழை பெய்தாலோ, அன்டை மாநிலங்களில் உற்பத்தி குறைந்தாலே தக்காளி விலை உயரும். அதுபோல் உற்பத்தி அதிகரித்தால் விலை வீழ்ச்சியடையும். தக்காளி இல்லாமல் சமையல் செய்ய முடியாது என்பதால் எந்த விலையில் விற்றாலும் மக்கள் தக்காளியை வாங்கி பயன்படுத்துவார்கள். இந்நிலையில், மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் முதல் தக்காளி விலை கடும் வீழ்ச்சியை அடைந்துள்ளது.15 கிலோ கொண்ட முதல் தர தக்காளியே ரூ.80-க்குதான் விற்கிறது. மூன்றாவது ரகம் ரூ.40-க்கு கூட வாங்குவதற்கு ஆளில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/92Tk6wh
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக