
மும்பை: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் 2023-24 நிதியாண்டிலும் தொடர வாய்ப்பு உள்ளதாக ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் மத்திய இயக்குநர்கள் குழுவின் சட்டபூர்வ அறிக்கையான 2022-23-ஆம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கை இன்று (மே 30) வெளியிடப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: "நாட்டின் மிகப் பெரிய பொருளாதார கொள்கைகள், பொருட்களின் மிதமான விலை, வலுவான நிதித் துறை, ஆரோக்கியமான பெருநிறுவன துறை, நிதிக் கொள்கையை வலுப்படுத்தும் நோக்கிலான அரசின் தரமான செலவினங்கள், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளின் மறுசீரமைப்பிலிருந்து உருவாகும் புதிய வளர்ச்சி வாய்ப்புகள் ஆகியவற்றின் பின்னணிகளைக் கருத்தில் கொண்டால் இந்தியாவின் வளர்ச்சி வேகம் கூடும். 2023-24-ம் ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்கும் சூழல் ஏற்படாது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jWEo8av
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக