
ஓசூர்: ஓசூரில் மகசூல் அதிகரிப்பால் முட்டைகோஸ் விலை சரிந்துள்ளது. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஓசூர் சுற்று வட்டாரப் பகுதியில் குறுகிய காலத்தில் விளையும் காய்கறி பயிர்களை அதிகளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக கெலமங்கலம், தேன்கனிக் கோட்டை, தளி, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் முட்டைகோஸ் அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர்.
இங்கு அறுவடையாகும் முட்டைகோஸ் தமிழகம் மட்டும் அல்லாமல் கேரளாவுக்கும் அதிகளவில் விற்பனைக்குச் செல்கிறது. கடந்தாண்டு 50 கிலோ முட்டைகோஸ் மூட்டை ரூ.900 முதல் ரூ.1,500 வரை விற்பனையானது. நடப்பாண்டு, மகசூல் அதிகரிப்பால் சந்தைக்கு வரத்து அதிகரித்து ஒரு மூட்டை அதிகபட்சமாக ரூ.400-க்கு விற்பனையானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UsInvf2
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக