
சென்னை: நடப்பு 2023-24ம் ஆண்டில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் 15 வகையான வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக அரசு ரூ.45 லட்சம் நிதியினை ஒப்பளித்து, அரசாணை வழங்கி, அதற்கான பணியை துவக்கி உள்ளது என்று தமிழக வேளாண் மற்றும் உழவர் நலன்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாகுபடி செலவினைக் குறைத்து, மகசூலை அதிகரித்து, விவசாயிகளின் வருமானம் உயர்வதற்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இந்த வகையில், நமது மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பாரம்பரியமாக சாகுபடி செய்யப்பட்டு வரும் பயிர்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு அரசு எடுத்துவரும் நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BYeWIUn
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக