offer for you

புதன், 31 மே, 2023

தமிழகத்தில் 2 ஆண்டுகளில் புதிய தொழில்முனைவோர் ஆன 2,344 பட்டியலின, பழங்குடியின இளைஞர்கள்: அரசு தகவல்

சென்னை: "தமிழக அரசு பொறுப்பேற்ற இரண்டு ஆண்டு காலத்தில், 4 வகையான சுயவேலைவாய்ப்புத் திட்டங்கள் மூலம் பட்டியல், பழங்குடியின இளைஞர்களுக்கு ரூ.58.34 கோடி மானியத்துடன் ரூ.177.72 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டு, 2,344 படித்த இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர்" என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை, கிண்டி, சிட்கோ வளாகத்தில் இன்று (மே31) நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ரூ.100 கோடி மதிப்பில் புதியதாக அறிவிக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் குறித்த திட்ட விளக்க கையேட்டினை வெளியிட்டார். அதனை MSME அரசு செயலாளர் வி.அருண்ராய், பெற்றுக் கொண்டார். விழாவில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியின சங்கத்தினர், தொழில் முனைவோர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் குறித்து விளக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dNTcIfO
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now