offer for you

வெள்ளி, 9 ஜூன், 2023

27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ‘மிஸ் வேர்ல்டு' போட்டி

புதுடெல்லி: இங்கிலாந்தைச் சேர்ந்த எரிக் மோர்லே என்பவர் கடந்த 1951-ம் ஆண்டில் ‘மிஸ் வேர்ல்டு' போட்டியை தொடங்கினார். ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நாட்டில் இந்த உலக அழகிப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 1996-ம் ஆண்டில் ‘மிஸ்வேர்ல்டு' போட்டி இந்தியாவில் நடைபெற்றது. இந்த சூழலில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மிஸ் வேர்ல்டு 2023' அழகிப் போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து டெல்லியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ‘மிஸ் வேர்ல்டு' அமைப்பின் தலைவர் ஜூலியா மோர்லே கூறும்போது, “வரும் நவம்பர், டிசம்பரில் இந்தியாவில் ‘மிஸ் வேர்ல்டு 2023' உலக அழகிப் போட்டி நடத்தப்படும். இது 71-வது 'மிஸ் வேர்ல்டு' போட்டியாகும். உலகம் முழுவதும் இருந்து 130 நாடுகளை சேர்ந்த பெண்கள் போட்டியில் பங்கேற்க உள்ளனர். அழகு, பன்முகத்தன்மை, பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்த போட்டி இருக்கும்" என்று தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EQwDMYC
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now