
தூத்துக்குடி: நாட்டின் அந்நிய செலாவணியை ஈட்டுவதில் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி மிக முக்கிய பங்காற்றி வருகிறது. அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகளில் இந்தியாவின் கடல் உணவு பொருட்களுக்கு அதிக தேவை இருப்பதால் ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் தூத்துக்குடி மண்டல அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: 2022-2023-ம் நிதியாண்டில் இந்தியா பல்வேறு சவால்களை எதிர் கொண்ட போதிலும் ரூ.63,969.14 கோடி மதிப்புள்ள 17,35,286 மெட்ரிக் டன் கடல் உணவு பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ujJYebr
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக