
புதுடெல்லி: சமீபத்தில் கிலோ ரூ.10 முதல் ரூ.20- வரையிலான விலையில் விற்கப்பட்ட தக்காளி இப்போது திடீரென அதிகரித்து ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. தக்காளி விளையும் பகுதிகளில் ஏற்பட்ட கனமழை காரணமாக வரத்து குறைந்தே இதற்கு காரணமாகக் கருதப்படுகிறது.
தக்காளியின் இந்த திடீர் விலை அதிகரிப்பு குறித்து மும்பையைச் சேர்ந்த பொருள்கள் சந்தை நிபுணரும், கேடியா அட்வைசரியின் தலைவருமான அஜய் கேடியா கூறுகையில், "பல்வேறு காரணங்களுக்காக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தக்காளி குறைவாகவே பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பீன்ஸ் விலை உயர்ந்ததால், பல விவசாயிகள் இந்த ஆண்டு பீன்ஸ் விதைத்தனர். என்றாலும் பருவ மழை சரியாக பெய்யாததால் பயிர்கள் கருகி வீணாகின. வெப்ப அலை மற்றும் கனமழை காரணமாக காய்கறிகள், குறிப்பாக தக்காளி வரத்து குறைவாகவே உள்ளது" என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UxMqNa0
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக