
மும்பை: பணியாளர் ஓய்வூதிய திட்டத்தின் (இபிஎஸ்) கீழ் அதிக பென்ஷன் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அந்தக் கெடு இன்று (ஜூன் 26) உடன் முடிவடைவதாக இருந்தது. இந்நிலையில் கால அவகாசம் ஜூலை 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஊழியர்களும், ஓய்வூதியதார்களும் மேலும் 15 நாட்கள் அவகாசம் பெறுகின்றனர். இந்தக் காலக்கடத்தைப் பயன்படுத்தி, பணியாளர்கள் தங்கள் முதலாளிகளுடன் தொடர்புடைய பிராந்திய அலுவலகத்தில் பத்தி 11(3) மற்றும் 11(4) ஆகியவற்றின் கீழ் கூட்டு விருப்பத்தினை சமர்ப்பிக்கலாம். அதேபோல் நிறுவனங்கள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்து ஒப்புதல் வழங்க வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/E5D8VXm
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக