
மும்பை: தகவல் தொழில்நுட்பத் துறை ஜாம்பவானான டாடா கன்ஸல்டன்ஸி சர்வீஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தின் மீது ஊழியர்களைப் பணியமர்த்த லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதனை அந்நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது தொடர்பாக டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாங்கள் எங்கள் நிறுவனத்தின் மீது எழுந்த புகார் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தினோம். அதன் அடிப்படையில் எந்த ஒரு தவறும் ஊழலும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்கிறோம். எங்கள் நிறுவனத்தின் மீதான அந்தக் குற்றச்சாட்டு தவறானது" என்று தெரிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YuKS78k
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக