
சென்னை: எதிர்வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று உலக அளவில் 5 கதவுகள் கொண்ட மஹிந்திரா தார் எஸ்யூவி வாகனத்தை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று மஹிந்திரா தங்கள் தயாரிப்பை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. கடந்த 2020 முதல் இந்த வழக்கத்தை அந்நிறுவனம் கடைபிடித்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு 5 கதவுகள் கொண்ட மஹிந்திரா தார் எஸ்யூவி-யின் அறிமுகம் அமைந்துள்ளது. இந்த வாகனம் தென்னாப்பிரிக்க நாட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதே நேரத்தில் இந்தியாவிலும் இந்த வாகனம் அறிமுகம் செய்யப்படும். தென்னாப்பிரிக்காவில் கடந்த 1996 முதல் வாகன விற்பனையை மேற்கொண்டு வருகிறது மஹிந்திரா. அந்த நாட்டில் எக்ஸ்யூவி மற்றும் ஸ்கார்பியோ வாகனங்களை மஹிந்திரா விற்பனை செய்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/grEIbBT
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக