
சான் பிரான்சிஸ்கோ: ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோ இன்று பொறுப்பேற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் ட்விட்டரின் உரிமையாளர் எலான் மஸ்க் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை ட்வீட் மூலம் குறிப்பிட்டுள்ளார் லிண்டா. இதை அமெரிக்க நாட்டின் செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.
கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி இருந்தார் மஸ்க். பயனர்கள் தங்களது கருத்துகளை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் இந்த தளத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை அவர் செய்தார். பயனர்களுக்கு சந்தா கட்டணம் தொடங்கி ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது என அவரது நடவடிக்கைகள் நீண்டன. இந்தச் சூழலில் லிண்டாவை புதிய சிஇஓ என மஸ்க் அறிவித்தார். அதோடு ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாக தலைமை மற்றும் சிடிஓ என தனது செயல்பாடு இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4oCIMOp
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக