
மதுரை: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில், இந்தியா - பங்களாதேஷ் வர்த்தக வாய்ப்புகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி தொழில் வர்த்தக சங்கத்தலைவர் ஜெகதீசன் தலைமையில் மதுரையில் நடந்தது.
பங்களாதேஷின் துணைத் தூதர் ஷெல்லி சாலிஹின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: மதுரை மிகப்பழமையான தொன்மை நிறைந்த நகரமாக இருப்பதால் பங்களாதேஷ் மக்கள் மதுரைக்கு சுற்றுலா வர விரும்புகின்றனர். மதுரையிலிருந்து சமையல் எண்ணெய், வெங்காயம், சீனி, அரிசி ஆகிய உணவு பொருட்கள் பங்களாதேஷ்க்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகள் உள்ளன. வேளாண் மற்றும் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த தென் இந்திய தொழில் முனைவோரை பங்களாதேஷ்க்கு வரவேற்கிறோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WadKwDZ
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக